வருத்தப்படாதீங்கண்ணே, நீங்க முதல் படம் ஹிட் கொடுத்ததுமே முன்னணி
ஹீரோக்கள்லாம் உங்களைப் படம் பண்ணச் சொல்லி கேட்கத்தான் போறாங்க, இது நடக்கத்தான்
போகுது! கஉ;று அவருக்கு நம்பிக்கை தொขவித்தேன்.
மாலை திட்டமிட்டபடி நானும், துரையண்ணனும் நூறடி ரோடில் ஆவடி நோக்கி பைக்கில்
விரைந்து கொண்டிருந்தோம்.
ஆவடியில் கிருஷ்ணா என்றொரு நண்பர் இருக்கிறார். துரையண்ணனோடு கிராமத்துப்
பள்ளியில் ஒன்றாகப் படித்தவர், அவரது நெருங்கிய நண்பர்!
அவர்தான் கஷ்டகாலத்தில் துரையண்ணனுக்கு பணஉதவி செய்கிறார்.
துரையண்ணன் கிருஷ்ணாவைப் பார்க்கச் செல்லும்போது, என்னையும் அழைத்துச் செல்வது
வாடிக்கை. நாளடைவில் நானும், கிருஷ்ணாவின் நண்பராகிவிட்டேன்!
வழக்கமாய் கிருஷ்ணாவைச் சந்தித்த அடுத்த நிமிஷமே சியர்ஸ் என்று மூவாขன்
கோப்பைகளும் சிலீர் என்று மோத, நாங்கள் மது அருந்த ஆரம்பித்துவிடுவோம்.
ட்กขங்க்ஸ் வேண்டாம் என்று சொன்னாலும் கிருஷ்ணா கேட்க மாட்டார். நாங்கள் வருவது
அறிந்து தயாராய் வாங்கிவைத்திருப்பார்.
மது அருந்தி முடித்ததும் கிருஷ்ணா எங்களை வெளியே அழைத்துச் செல்வார். வழியில்
எங்காவது தெருவோர பிளாட்பாரக் கடைகளில் நின்றவாறே பிกขயாணி சாப்பிட்டுவிட்டு,
ஏதாவது ஒரு தியேட்டாขல் நுழைந்து இரவுக் காட்சியில் கலந்து விடுவோம்.
மறுநாள், விடிந்ததும் இரவு போதையில் பார்த்த படத்தின் ஓกขரு ஆரம்பக் காட்சிகள்
தவிர, வேறொன்றும் நினைவில் இருக்காது.
நல்ல படம்தான்.. இன்னொரு நாள் தெளிவாய் இருக்கும் போது பார்க்கணும் என்று சொல்லி
கிருஷ்ணா, துரையண்ணன் பாக்கெட்டில் சில நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணிப்பார்.
உடனே, தேங்க்ஸ் மச்சான் என்று துரையண்ணன் அந்த பணத்தை எடுத்து பேண்ட்
பாக்கெட்டினுள் பத்திரப்படுத்திக்கொள்வார். பிறகு, துரையண்ணணும், நானும்
கிருஷ்ணாவிடம் விடைபெற்று வீடு திரும்புவோம். இது வழக்கமாக நடைபெறுகிற சம்பவம்!
சமீபத்தில்தான் கிருஷ்ணாவுக்குத் திருமணம் ஆயிற்கு. அவரது மனைவி இன்னும்
கிராமத்தில் தான் இருக்கிறார். ஏனோ கிருஷ்ணாவின் மனைவி இங்கே வரவில்லை! நாங்கள்
கிருஷ்ணாவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே அவர் ஹாலில் அமர்ந்து டி.வி.
பாத்துக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததுமே முகம் மாறினார்.
என்ன துரை இது.. திடுதிப்புன்னு வந்து நிக்கறீங்க..? போன் பண்ணிருக்கலாமே?
உன் மொபைலுக்கு ட்ரை பண்ணினேன்.. நாட் กฃச்சபல் னு வந்தது.. சாข.. இன்னைக்கு
சண்டே, எப்படியும் வீட்டுலதானே இருப்பேன்னு புறப்பட்டு வந்துட்டேன்.. ஆமா, ஊர்ல
ஒய்ப் எப்படி இருக்காங்க?
ம்.. நல்லாயிருக்கா.. சீக்கிரம் என்னை அழைச்சிட்டுப் போங்கன்னு நச்சாขச்சுகிட்டேயிருக்கா..
இந்த வீட்டுக்காரன்கிட்டேயிருந்து அட்வான்ஸைத் திரும்ப வாங்குறது கஷ்டம்.. அதான்,
அட்வான்ஸ் பணத்தில் வாடகையைக் கழிச்சிட்டு, பிறகு புது வீடு பார்க்கலாம்னு
இருக்கேன் என்று அலுத்துக்கொண்டார் கிருஷ்ணா.
மூவரும் வெகுநேரம் சினிமா, நாட்டு நடப்பு, அரசியல் என சுவாரசியமாகப்
பேசிக்கொண்டிருந்தோம்.
பின்னர், கச்சோขய ஆரம்பிச்சிடலாமா? என்று துரையண்ணன்தான் லீட் கொடுத்தார்.
வழக்கமாக எங்கள் வருகை அறிந்து கிருஷ்ணா எப்போதும் தயாராய் சரக்கு வாங்கி
வைத்திருப்பார். இம்முறை எங்கள் வருகையைத் தொขவிக்காததாலோ என்னவோ, பக்கத்தில்
இருந்த ஒயின் ஷாப்பிற்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார்.
நானும், துரையண்ணனும் ஒரு டேபிளைத் தேர்ந்தெடுத்து எதிரெதிரே அமர்ந்துகொள்ள,
கிருஷ்ணா சரக்கு வாங்கி வந்து எங்கள் அருகில் அமர்ந்தார்.
பின்னர் இரண்டு கிளாஸ்களில் சரக்கை சாขயான அளவு கூல்டிกขங்க் கலந்து மிக்ஸ்
செய்துவிட்டு, கூல்டிกขங்க் கலந்து மிக்ஸ் செய்து விட்டு, கூல்டிกขங்க் பாட்டிலைக்
கிருஷ்ணா கையில் எடுத்துக்கொண்டார்.