அறச்செயல் என்பது பிற உயிர்களைக் கொல்லாது இருத்தலாகும்; அறம் விட்டு
பிற உயிர்களை கொல்லுவதால் பெரும்பெரும் துன்பங்களுக்கு ஏதுவான எல்லா
வினைகளும் (கர்மங்களும்) வரும்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் எண்:327)
தன் இனிய உயிரை விடும் நிலை தோன்றினும் அதற்காக பிறிதொரு இனிதான உயிரை
நீக்குதலை செய்யாது இருப்பானாக! (தன் உயிரை விட்டும் பிற உயிரை காக்க.)