menu






  • சில்லுக்கோடுகள்

    - மா. வெங்கடேசன்

வாழ்க்கையின் நகர்வுகளோடு
இன்னும்
தீர்ப்பு அளிக்கப்படாத வழக்காய்
வறுமை, பசி, பட்டினி என
நம் கண்முன்னே
பட்டியலிட்டு நீள்கின்றன.

சுயநலத்தாலும்
பணத்தாலும் நம் வாழ்க்கையில்
மனிதர்களோடு மனம் பேசாமல்
தொலைந்து போனவை
அன்பு மட்டுமே.
புதிய உலகம் காண
பழைய கட்டமைப்புகளைத் தகர்த்து
மீட்டெடுப்போம்
அன்பு என்னும் குழந்தையை...

 

என் தங்கை

அடுத்தமுறை தந்துவிடுவான் என
ஒவ்வொரு முறையும்
வாங்கித் தந்துவிடுகிறாய்
அப்பாவிடம் பணத்தை..

ஊருக்கு வரும் மாமா
சொல்லிவிட்டு செல்கிறார்..
எப்பொழுதும்
நீயும் உன் குழந்தைகளும்
என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதாக..

விரல்களின் நகங்களை வெட்டும் போதும்
என் வலியை
உணந்திருக்கிறாய் நீ

ஒருவாரம் கூட
பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை
அழுதுவிடுவாய்
என் முகம் பார்க்காததால்

இப்பொழுதெல்லாம்
எல்லோ¡¢டமும்
சொல்லிக் கொண்டு வருகிறாய்
கல்யாணம் ஆனால் அண்ணன்
மாறிவிடுமா
என சந்தேகித்தபடி..

 

ரயில் பயணத்தில்
அம்மா. தாயே
எனும் கூக்குரல் கேட்டு
சட்டைப்பையில் சில்லரையைத்
துழாவுகையில்
"ஒரு ரூபாய்க்கு பத்து ஊசி" எனும்
பார்வையற்றவனின் கனீர்குரலில்
வாங்கி விடுகிறேன்
பத்து ஊசியை
உழைப்பின் உன்னதத்தை உணர்ந்தபடி

இருந்தும்
மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
குழந்தையின் விசும்பல்..

 

தம்பியின் முதுகினை பிடித்தபடி
கிணற்றில் நீச்சல் பழகியதும்

ஏ¡¢யில் மீன்பிடிக்க சென்றபோது
கால் சட்டையில் மாட்டிக்கொண்ட
கெண்டை மீனும்

பட்டாம் பூச்சி, ஓணான்,
தும்பியை பிடிக்க
துரத்திச் சென்ற காலங்களும்

பள்ளி நாட்களில்
தோழிகளுக்குப் பிடிக்குமென
புளியாம்பழம், மாங்காய் அடித்து
பகிர்ந்துதின்றதுமான
கடந்த காலங்கள்

தார் சாலையில்
மடிந்துப்போன வண்ணத்துப்பூச்சியை
பார்த்து கடந்தபடியே செல்கிறது
நகர வாழ்க்கை
                                        தொடரும்»