menu






 

சின்னஞ்சிறு வயதில்...

வளர்ந்துவிட்டோம் பெண்ணே
ஆனால் நினைவுகள் அப்படியே

கிச்சிகிச்சான் தாம்பாளமும்
ஒத்தையா ரெட்டையாவும்
கண்ணாமூச்சி ரே...ரேவும்
கொலை கொலையா முந்திกขக்காவும்
மாலைப்பொழுதும் விடுமுறை தினமும்
கொடுக்காப்புளியும், பிஞ்சி மாங்காயும்
அல்லி மலரும் அடுத்த வீட்டு ரோஜாவும்
மறந்துவிட்டாயா?
நீ என்ன செய்வாய் பாவம்!

பருவத்தை சொல்லி
பாழாக்கிவிட்டார்கள் நம் நேசத்தை!

- ந. ஏகம்பவாணன்