menu






  • ஞானக்கூத்தன் கவிதை

ஆபத்தான நாட்கள்

ஆபத்தான நாட்களைப் பற்றி நீங்கள்
நான் சொல்லாமலேயே அறிந்திருப்பீர்.
இருந்தாலும் எதற்கு நான் சொல்கிறேன்
என்றாலும்
சும்மா நட்பு நோக்கத்தான்

வானரங்கள் இடம் மாறும் போது
நீங்கள் கவனித்ததுண்டா?
ஒருமுறை பின்னே திரும்பிப் பார்க்கும்
ஆபத்தான நாட்களில் ஒன்று
தங்களைத் தொடர்கிறதே என்றும்
சந்தேகம் கொண்டு

இலுப்பை மரத்தின் கிளையிலே
சிந்தனையில் சூழ்ந்திருந்த ஆந்தை
திடீரெனப் பறந்ததும் கூட
ஆபத்தான நாட்களை அஞ்சித்தான்

ஆபத்தான நாட்கள் வண்ணம் அற்றவை
சுவை அற்றவை
வெப்பம் குளிர்ச்சி ஏதும் அற்றவை
அந்த நாட்கள் பெயரும் பெறாதவை
எந்த மாதத்திலும் அந்த நாட்கள்
இடையில் இடம்பெறக் கூடியவை

என்றாலும் ஆபத்தான நாட்கள் தங்களை
அறிவிக்கத் தொ¢ந்தவை
அரக்கர் நான்கு பேருடன் விபீஷணன்
சபையை விட்டுப் போனபோது
இராவணன் பார்த்தான் ஆபத்து
நாட்களின் பஞ்சக மங்கல சி¡¢ப்பை

முதல் நாள் போர் நேரும் வரைக்கும்
திரும்பத் திரும்பத் தோன்றின
ஆபத்தான நாளின் மங்கிய வி¡¢ப்பு
காலை நீட்டிப் படுக்கும் பொழுது
துவாரகைக் கண்ணன் பார்த்தான்
தனது உள்ளங்காலில்
ஆபத்தான நாட்கள் மானின் விழிகளை
வரைந்து கொண்டிருப்பதை

நாட்கள் நாட்கள் என்று
மா¢யாதைப் பண்மையில்
சொல்கிறேனே ஏன் என்று
கேட்கிறீர்களா நீங்கள்
ஆபத்தான நாட்கள்
மா¢யாதை விரும்பிகளாய்
இருக்கலாம் என்றுதான்.