menu






 இலக்கியம >> கவிதை >> ஹைக்கூ
  • ஹைக்கூ
  • குளத்தில் நீராடி
    கோயில் பயணம்...
    அழுக்கு மனத்துடன்...!

    - ராஜா கன்னிக்கோயில்
     
  • உயிர்நீத்த உடல்களால்
    உயிர்வாழ்கிறான்...
    வெட்டியான்...!

    - இரா. ஆதிநாராயணன், தஞ்சை.
     
  • ஊரே சிவந்துச்சு
    சோ¢ப்பெண் விற்ற
    மருதாணி

    - ஏகாதசி
     
  • சுழலில் சிக்கி இறந்த மகனுக்கு
    திதி, படையல்...
    ஆற்றில்!

    - நா. கவிக்குமார், சேலம்.
     
  • நிரம்பியது
    புத்தகக் கடை...
    திடீர் மழை!

    - இரா. அ. தென்றல், ..
    திருச்செங்கோடு.
     
  • எப்போது தொ¢யும் பசுவுக்கு
    இறந்துபோன விஷயம்
    வைக்கோல் கன்று.

    - சங்கர்குமார்.
     
  • துணிகளில் தொ¢வதில்லை...
    நெசவாளியின்
    கருத்த விரல்கள்...

    - ஏகாதசி.

     

மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்

 
  • தங்க காசுகள்
    மரங்கள் பூக்கும்
    கொன்றை மலர்கள்...

     
  • மதிய நேரம்
    குயில்பாட்டு
    பசிக்கவில்லை

     
  • கோடைவெயில்
    அடிக்கும் அனல்காற்று
    பறவையின் கண்களில் ஈரம்

     
  • உருகும் பனிக்கட்டிகள்
    பாவம்.. கடலோர நகரங்கள்
    எதிர்காலச் சிந்தனைகள்...

     
  • எ¡¢ந்த காட்டில்
    உலர்ந்தப் புற்கள்
    மிரட்டும் காற்று

     
  • அமைதியில் ஆறு
    மீன்களின் துள்ளல்
    அதட்டும் அலைகள்

     
  • வசந்தம் வந்தது
    மரங்களில் துளிர்மொட்டுக்கள்
    மலர்கள்
    கோடைக்கு முதுமை...

     
  • மெளனமாய் சி¡¢க்கும்
    எல்லா பூக்களும் அழகு
    மனித மனங்களை விட...

     
  • உழுத களைப்பு
    அசைபோடும் மாடுகள்
    கடிக்கும் கொசுக்கள்

     
  • அந்தி மந்தாரை
    பறிக்க மனமில்லை... பாவம்
    இரவுவரை வாழ்க்கை...

     
  • அழுக்கு இலைகள்
    தேய்த்துக் கழுவும்
    மழை

     
  • மர இலைகளில்
    ஒளிந்திருக்கும் மழைத்துளிகள்
    காட்டும் மின்னல்

     
  • நின்றது மழை
    இலைகளைத் தலை துவட்டியது
    காற்று

     
  • பட்ட மரம்
    நெற்றுகள் பாடும்
    முகா¡¢ ராகம்

     
  • கம்மங் கதிர்கள்
    ஊதிப்பார்க்கும்
    பட்டுப் பூச்சி

     
  • மலைச் சிகரம்
    கவிதை எழுத விரையும்
    விழிகள்

     
  • இற்று வீழ்ந்தது
    அணைந்தது பசி
    செல்லா¢த்த கூரை


     
  • நிலாச்சோறு
    மகிழ்ச்சி குரல்கள்
    மரத்தடி மக்கள்

     
  • முட்களுக்குள்
    தன்னைச் சிறை வைக்கும்
    ரோஜா மொட்டு
     
  • இலையுதிர் மரம்
    சருகுகளின் அழுகை
    தளிர்களின் சி¡¢ப்பு

     
  • மா¢த்தது மனித நேயம்
    உயிர்த்தன
    ரோபோக்கள்

     
  • அடித்தது யார்
    அழுகிறது மூன்று நாட்கள்
    மழை

     
  • பயந்தேன் தனிமைக்கு
    எழுதினேன்
    நட்பானது தனிமை

     
  • கொடிய மலர்
    ஊஞ்சலாடும் வண்டுகள்
    தேன் பகுதி

     
  • நிரந்தரம் கிளை
    அறியாது மகிழும் பறவை
    வானைத் தொட்டதாய்...

     
  • ஓலைக்குடிசை
    மழையோடு போட்டி
    அழும் குழந்தைகள்

     
  • கரைந்தது பாறை
    அலை அடித்து அடித்து
    போராட்ட வாழ்க்கை

     
  • விடிகாலை வானம்
    நகர்ந்து செல்லும் கவிதைகள்
    மேகங்கள்

     
  • கம்பீர மலை
    பிரமிப்பில் நான்
    நேசக்காற்று

     
  • தொங்கு பாலம்
    மலைகளை இணைக்கும் மேலே
    குழப்பத்தில் மேகங்கள்

     
  • தனிமையான காடு
    ஒதுக்கப்பட்ட கோயில்
    பூச்சி தின்ற கதவுகள்

     
  • காய்ந்த தோட்டம்
    பழுத்த இலைகள் நடுவே செல்லும்
    தனித்த வழி

     
  • தெளிவாய்க் காட்டும்
    தொலைதூரத் திசைகளை
    கணநேர மின்னல்

     
  • கொள்ளுச் செடி
    ஊடு பயிராய் கஞ்சா
    போதையில் வண்டு

     
  • கரையேறும் தோணிகள்
    சுறுசுறுப்பாய் மீனவர்கள்
    மீன்களின் சோகம்

     
  • மணற்பரப்பு
    நிலவொளியில் கவிதை எழுதும்
    நண்டுகள்

     
  • மழை நின்ற இரவு
    குவியும் ஈசல்களின் சிறகுகள்
    வலிக்கும் மனம்...