menu






 ஆரோக்கியம >> பெண்களுக்கான யோகாசனம்
பெண்களின் ஜனனேந்தி¡¢யங்களைப் பற்றி அறிதல்

சமுதாயத்தில் பெண்களின் பங்கு:

ஆண், பெண் இருவர் அடங்கியதே சமூகம். சமூகம் மேனிலையுற்றால் நாடு முன்னேற்றமடையும். ஆதலால் இவர்களால் உருவாக்கப்படும் பிராஜாபிவிருத்தி, இவர்களுடைய திட ஆரோக்கியம், மனோபலம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். குருவானவர் நன்கு வித்தைகளைக் கற்றுத் தேர்ந்திருந்தால் சிறந்த சீடர்களை உருவாக்கி விட முடியும். ஆதலால் பிரஜாபிவிருத்திக்கு மூல காரணகர்த்தாக்கள் திடமாக, ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதிலும் பிறப்பிக்கும் தர்மத்தை பெண்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதனால் பெண்கள் வீ¡¢யம் அடைந்து பலசாலிகளாக, மன உறுதிமிக்கவர்களாக இருப்பார்களானால் குழந்தையும் அவ்வாறே அமையும். ஆகையால் இயற்கையாகவே பெண்களின் உடல்நிலைகளில் தனிப்பட்ட மாறுதல்களும் அவற்றின் உபாதைகளும் உள்ளன. இந்த உபாதைகளை (1) மாதவிடாய் சம்பந்தக் கோளாறுகள், (2) கருச்சிதைவு, (3) கடினப் பிரசவம், (4) பருவமடைதலில் கோளாறுகள் என நான்கு வகைகளாகப் பி¡¢க்கலாம்.

பருவமடைதலில் கோளாறு:

இயற்கை அளித்த பிரஜா உற்பத்தித் தொழிலுக்கு பெண்கள் பதிமூன்றிலிருந்து பதினாறு வயதுக்குள் தயாராகிவிடுகிறார்கள். இத்தொழிலுக்கு பெண்களிடத்திலுள்ள முக்கிய கருவிகளாக வெஜினா (Vegina) ஓவா¢ஸ் (Overies) ஆகியவற்றிலுள்ள ஓவம் நுழையும் பல்லோபியன் குழாய் (Fallopian tube). கருப்பை (Uterus or womb) முதலியனவாகும். பெண்குறி (Verginal) பூப்படைதல் அல்லது பருவமடைதல் என்பது முதன்முதலாக மாதத் தீட்டு ஏற்படும் நிகழ்ச்சியைக் குறிக்கும் சொல்லாகும். சில பெண்களுக்குப் பூப்படைவதில் தாமதம் ஏற்படுவதற்கோ அல்லது பூப்படையாமைக்கோ அநேக காரணங்கள் இருப்பினும் இங்கே சுருக்கமாக பிரதானமான கருத்தை மட்டும் தருகிறேன். குலற்ற சதைக் கோளங்களான தைராய்டு, அட்¡¢னல், பிட்யூட்டா¢, ஓவா¢ஸ் போன்றவற்றின் செயல்களால்தான் மாதத் தீட்டு ஏற்படுகிறது. இவற்றின் செயல்களில் எவையேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றவற்றின் இயக்கங்கள் பழுதடையும். மற்றொன்று, கருப்பை வளர்ச்சியின்றி இருந்தாலும் கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு பாதஹஸ்தாசனம், சர்வாங்க ஆசனம் மூலம் யோக முறையில் தீர்வு காணமுடியும்.

கருச்சிதைவு:

கருச்சிதைவுக்கு முக்கியக் காரணம் வயிற்றுச் சதைகளும், கருப்பை போதுமான பலமின்றி பலவீனமாய் இருப்பதுமாகும். இவற்றை இயக்கும் நரம்புகளும், நரம்புக் கோளங்களும் வீ¡¢யமிழந்து காணப்பட்டாலும் கருச்சிதைவு ஏற்படும். அடுத்து கருப்பை தன் நிலை விட்டு மாறியிருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட ஏதுவாகும்.

சுகப்பிரசவம்:

இடுப்பு, இடுப்புச் சதைகள், அடிவயிற்றுச் சதைகள் எல்லாம் நல்ல போதிய பலத்துடன் இருந்தால்தான் சுகப்பிரசவம் ஏற்படும். பலவீனமுள்ள அநேக பெண்கள் பிரசவ நேரத்தில் தன் உயிரோ அல்லது சிசுவின் உயிரோ துறப்பதற்குக் காரணமாகி விடுகிறார்கள். பிரசவம் எளிதாக நடைபெறுவதற்கு ஹலாசனம், பச்சிமோத்தாசனம் ஆகியவை சிறந்த வழிமுறைகளாகும்.
யோகாசனங்கள் ஒவ்வோர் உறுப்பிற்கும் மிகுந்த பயிற்சி அளித்து புத்துயிரளிக்கிறது. சமூகத்தை உருவாக்குவதில் பெண்கள் பெரும்பங்கு வகிப்பதால், அவர்கள் நல்ல ஆரோக்கியமும், மனோபலமும் இருக்கப் பெற்றால்தான் இளம் சந்ததியினரை நன்கு உருவாக்கிவிட முடியும். இவற்றைப் பெறுவதற்கு யோகாசனம் ஒன்றைத் தவிர மற்ற எந்த வைத்திய முறையில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் பெறமுடியாது.

பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்:

இயற்கையாகவே இறைவன் பெண்களுக்கு மிக மென்மையாக உடலமைப்பை ஈந்திருக்கிறார். பெண்களுக்கு ஏற்படக்கூடிய பருவமாறுதலுக்கு இம்மென்மையான உடலமைப்பு மிக அவசியமாகிறது. எவ்வாறு எனில் அவர்கள் பருவமடைதல் போன்ற நிலைகளில் மிக உதவிகரமாயிருக்கிறது.

அடுத்த மென்மையான இந்த உடலமைப்பு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றதோ அதேபோன்று குறைகளும் உள்ளன. பெண்கள் பூப்படையும் காலத்தில் உடலில் அநேக மாறுதல்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தியாகத்தைப் பெண்களே ஏற்றுக் கொள்ளுவதால் அவர்களுடைய உடலமைப்பில் தனிப்பட்ட வேறுபாடுகளும், உபாதைகளும் (மாதவிடாய்க் கோளாறுகளும், கருச்சிதைவுகளும், பிரசவமும்) ஏற்படுகின்றன.

அடுத்து, உடல் நீண்டு வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. கால்கள் குறுகுவதையும் தொடைகளின் தசை அதிகமாவதும் மார்பகங்கள் வளர்ச்சியடைவதும், சுவாசம் கொள்ளளவு சற்று அதிகமாவதையும் நன்றாக காணலாம். மேலும் எலும்புகள் மிகவும் லேசாகவும் சதைகளின் எடைக் குறைவாகவும் காணப்படுவதால் அவர்களின் புவிஈர்ப்புத் தானம் மிகவும் குறைவுறுகிறது. இவை யாவும் குறைகளே. இதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தாய்மையடைந்து இருக்கும் நிலையில் இரு உயிர்களுக்காக அவர்கள் சுவாசம் செய்யவேண்டும். தாயின் சுவாச நிலையில் ஏதேனும் குறைபாடு ஏற்படுமாயின் அது வளரும் சிசுவையும் பாதிக்கிறது.

எனவே, இந்நிலையில் இயல்பாகவே அவர்களுக்கு மனோநிலை பாதிக்கப்பட்டு படபடப்பு, நிதானம், பொறுமை, உணர்வு ஆகிய யாவும் பாதிக்கப்படுகின்றன. மேற்கண்ட குறைகளை எல்லாம் தேகப்பயிற்சி மூலமாகத் தீர்க்க முடியாது. ஆனால் யோகப் பயிற்சி மனோ ¨தா¢யத்தை வளர்த்து உடலுக்கு அதிக இரத்த ஓட்டத்தையும் அதிகா¢க்கச் செய்கிறது. மகப்பேறு மிகச் சுலபமாக வேதனையின்றி அடைய வழி செய்கிறது.


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்