சித்த மருத்துவ
குறிப்புகள்
ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க : காய்ச்சல்
விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டு கொள்பவர்கள் ஓமத்தை அரைத்து
தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.
சளி தொல்லை நீங்க : (1) அருகம்புல் சாறு
பருகிவர சளிதொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள்
தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.
மூக்கடைப்பு நீங்க : ரோஜா மலரை
முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.
சளி மூக்கடைப்பு தீர : கடுக்காய் பவுடர்,
நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளிமூக்கடைப்பு குணமாகும்.
கபம் நீங்க : அமுக்கிரால் கிழங்கை
பொடிசெய்து தினமும் இரவில் பாலுடன் சேர்த்து சாப்பிட கபம் நீங்கும்.
மார்புசளி நீங்க : ஏலப்பொடியை நெய்யில்
கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.
மூக்கடைப்பு : கண்டங்கத்தி¡¢ வேர் 40
கிராம், ஆடாதொடை வேர் 40 கிராம், அ¡¢சித் திப்பிலி 50 கிராம்,
சிதைத்து 2 லிட்டர் நீ¡¢ல் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி. வீதம்
தினம் 4 வேளை குடிக்கத் தீரும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :
மாதுளம் பழச்சாறு, அருகம்புல்சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை
சாப்பிட குணமாகும்.
மூக்கில் உள்ள புண் ஆற : மஞ்சளை சுட்டு
கா¢யாக்கி அதனுடன் வேப்ப எண்ணை கலந்து மைய அரைத்து புண்மீது தடவ
குணமாகும்.
மூக்குசம்பந்தமான நோய் குணமாக :
நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உண்டால் மூக்கு சம்பந்தமான நோய்
குணமாகும்.
ஆஸ்துமா குணமாக : வில்வ இலை பொடி
தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய் குணமாகும்.
ஆஸ்துமா குணமாக : கண்டங்கத்தி¡¢ பொடி
100 கிராம், சுருள்பட்டை பொடி 100 கிராம், திப்பிலி பொடி 50 கிராம்,
பெருங்காயம் 10 கிராம் ஒன்றாக கலந்து பாட்டிலில் வைக்கவும். இதை காலை,
மாலை 1/2 கரண்டி வெந்நீர் அல்லது பாலில் சாப்பிட்டு வர ஆஸ்துமா தலை
வலி, சளி, தும்மல் குணமாகும்.
(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
தொடரும்..