சித்த மருத்துவ குறிப்புகள்
41. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக :
நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.
42. மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :
மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சமஅளவு கலந்து 30 மி.லி. 3 வேளை
சாப்பிட குணமாகும்.
43. சளி தொல்லை நீங்க : தூதுவளை
செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.
44. தலைவலி குணமாக : கீழாநெல்லிச்சாறு,
உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எ¡¢த்து
நசியமிட ஓயாத தலைவலி தீரும்.
45. தலைச்சுற்றல் குணமாக : கீழாநெல்லி
தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும்.
46. தலைவலி குணமாக : திருநீற்று பச்சிலை
சாறு, தும்பை சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில்
உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல
குணம் தரும்.
47. ஒற்றை தலைவலி குணமாக : தேத்தாங்
கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்பால் விட்டு அரைத்து
நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.
48. இருமல் நிற்க : முற்றிய
வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
49. வரட்டு இருமல் குணமாக : மஞ்சள்
துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீ¡¢ல் ஊற வைத்து உலர்த்தி இடித்துத்
தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
50. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல்
குணமாக : குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக
சுண்டங்கத்தி¡¢ வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி
கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும்.
(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
தொடரும்...