புகையிலை ஒரு தாவரம் தான்!
ஆனால் அது மனித உயிரை அழிக்கும் நச்சுத் தாவரம்!
புகையிலையில் 'நிக்கோட்டின்' எனும் விஷத்தன்மை உள்ளது.
சிகரெட், பீடி, முதலானவற்றைப் புகைக்கும்போது அது கார்பன்டை
ஆக்ஸைடுடன் கலந்து புகைப்பவனுக்கு நுரையீரலில் கான்சரை (புற்று நோயை)
தருகிறது. புகைக்காதவர் அவன் பக்கத்தில் இருந்தால் அவனுக்கும்
புற்றுநோய் வருகிறது. அத்தனை கொடியது 'நிக்கோட்டின்' என்று கூறுகிறார்
அமொ¢க்க டாக்டர்.
புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் 18 நிமிட மனித ஆயுளை
குறைத்துவிடுகிறது!
ஒரு பூனையை சாகடிக்க ஒரு துளி நிக்கோட்டின் போதும்!
ஒரு நாயை சாகடிக்க இரண்டு துளி நிக்கோட்டின் போதும்!
பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை புற்றுநோய் முதலான பல கொடும்
நோய்களுக்கு காரணம் என்கிறார் அமொ¢க்க டாக்டர் ஸ்பென்ஸ். உடலுக்கு
நோய் தவிர எந்த ஊட்டமும் இதில் இல்லை. வாயும் துர்நாற்றம் அடிக்கிறது.
இந்தக் கொடுமையைத் தடுக்க முதல் கட்டமாக பொது இடங்களில் புகைபிடித்தலை
முற்றிலுமாகத் தடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. புகையிலை
கொண்டு செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப்படும்.