ஈசாப் குட்டிக் கதைகள்
சிங்கமும் கழுகும்
ஒரு கழுகு சிங்கத்திடம் வந்தது; "நாம் இருவரும் நட்பாய் இருக்க
வேண்டும். ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம்" என்று சொல்லியது. சிங்கம்
யோசனை செய்தது; கடைசியாக, "எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், ஒரு விஷயம்;
நான் தரையில் இருக்கிறவன். நீ பறக்கிறவன். திடீரென்று நீ பறந்து
விட்டால் உன்னை எப்படிப் பிடிப்பது? அதனால் ஒப்பந்தப்படி நீ நடப்பாய்
என்பதற்கு முதலில் ஒரு ஜாமீன் கொண்டுவா" என்று சொன்னது.
தரமில்லாத சிநேகத்தை நம்ப முடியாது
மேலும்>>