எறும்பும் பட்டுப்பூச்சியும்
ஓர் எறும்பு உணவு தேடப் போய்க்கொண்டிருந்தது. வழியில் ஒரு
பட்டுப்பூச்சிப் புழு, கூட்டிற்குள்ளிருந்து வெளியே வரும் பருவத்தில்
வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. எறும்பு அதைப் பார்த்துப் பா¢தாபம்
கொண்டு, "பாவம், நான் எங்கு வேண்டுமானாலும் ஓடி ஆடித் தி¡¢கிறேன்.
எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் ஏறுகிறேன். உன்னால் இருந்த இடத்தை
விட்டு நகர முடியவில்லை. உன் கதி இப்படி இருக்கிறதே!" என்று சொல்லியது.
இதைக் கேட்ட புழு ஒன்றும் பதில் சொல்லவில்லை.
சில தினங்கள் கழித்து அதே வழியாக எறும்பு திரும்பவும் வந்தது;
பட்டுப்பூச்சியின் கூடு மட்டும் கிடந்தது. உள்ளே ஒன்றுமில்லை.
புழுவின் கதி என்னவாயிற்று என்று அது திகைத்து நிற்கும்போது அழகான
இறக்கையோடு பட்டுப்பூச்சி அங்கே தோன்றியது; எறும்பைப் பார்த்து, "ஏ
எறும்பே, என்னைப் பார்த்து முன்னால் பா¢தாபம் கொண்டாய்; இப்பொழுது
என்னைப் பார். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் ஏறமுடியுமென்று
பெருமையடித்தாய். சா¢ இப்பொழுது நான் பறக்கிற உயரத்திற்கு ஏறி வா
பார்க்கலாம்" என்று சொல்லி கேலி செய்தது.
தற்கால நிலையைக் கண்டு யாரும் பெருமை கொள்ளக்
கூடாது
>> மேலும்