பலி இடுதல்
தேங்காய் உடைத்தல், பூசணி உடைத்தல் முதலியன பலி
இடுதலாகும்.
பலி தருதல் பெரும் பாவமாகும்.
கொல்லான் புலால் மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்
எந்த தேவதையும் ஒரு உயிருக்கு இம்சை செய்வதால் மகிழ்ச்சி அடைவதில்லை. மாறாக பிற
உயிர்களை காப்பதாலேயே மகிழ்ச்சி அடைகின்றது!
பலி கொடுக்க விலங்கு இல்லாத போது மக்கள் தேங்காயில் காணப்படும் மூன்று கருந்
துளைகளில் இரண்டை கண்களாகவும், ஒன்றை வாயாகவும் கருதி அதனை விலங்காக கற்பனை செய்து
தேவதைகளுக்கு எதிரே உடைக்க தொடங்கினர்!
இதே போல, பூசணியில் குங்குமம் இட்டு விலங்காக கற்பனை செய்து அதனை உடைக்கத்
தொடங்கினர்.
சிலர் எலுமிச்சை பழத்தை புதிய வண்டி சக்கரங்களில் வைத்து நசுங்கச் செய்வதும் பலி
இடுதலின் பாவனையாகும்!
இப்படி செய்வது எல்லாம் பலி இடுதலின் பாவமாகும்; அதனால், துக்கமுடைய கீழ் கதி
கிடைக்கும்.